நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாட்டியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் என்கிற இளம்பிறை. ஏழ்மையான குடும்பத்தின் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவருக்கு இளம் வயதிலேயே உரைநடை, கவிதை என எழுத்து வசப்பட இவரது இலக்கிய வானம் பரந்து விரிந்தது."ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு
ஈத்திக்கொண்டிருக்கும் அம்மாவும் பசுவிற்கு உண்ணி பிடுங்கி நிற்கும் அப்பாவும் படித்ததில்லை "உயிர்களிடத்தில் அன்பு வேணும்"
- இளம்பிறையின் படைப்புகளில் இப்படி அன்பும் அறமும் இழைந்தோடும். கிராமிய கவிதை மொழியுடன் நவீன கவிதை மொழியும் கைவரப்பெற்ற இவரின் படைப்புகள், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. தமிழக அரசின் தொடக்கக் கல்வி தமிழ் பாடப்பொருள் உருவாக்கப் பணியில் தொடர்ந்து பங்களித்து வரும் இளம்பிறை, திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரான இவர், தான் ஏறும் அனைத்து மேடைகளிலும் புத்தக வாசிப்பின் அவசியத்தை, அருமையை வலியுறுத்தத் தவறு வதில்லை. படைப்புகளின் மூலமும் பேச்சின் மூலமும் வாசிப்பின் நேசம் கடத்தும் இளம் பிறைக்கு... "இலக்கிய ஆளுமை" விருது வழங்கு வதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்!