• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • நீர்க்காவலர்கள் - ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்

நீரை மட்டுமன்றி மொத்த மனிதர்களுக்குமான நேசத்தையும் சுரந்த பொதுக்கிணறுகள், இன்று நினைவுகளில் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. தங்கள் ஊரில் ஓர் அங்கமாக இருந்த கிணறுகளைக் கைவிட்டு, தண்ணீருக்காகத் தொலைதூரம் அலைகிறார்கள் கிராமத்து மக்கள். அந்த மக்களின் கரங்களை இணைத்து, கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டுருவாக்கம் செய்து உயிர்ப்பிக்கிறார்கள் இந்த இளைஞர்கள். மூடிக்கிடக்கும் மண்ணோடு சேர்த்து சாதியத்தையும் அகழ்ந்தெறிந்துவிட்டு கிணற்றின் ஊற்றை உயிர்ப்பித்துக் கையளித்துவிட்டு, அடுத்த ஊரின் தாகத்தைத் தீர்க்கக் கிளம்புகிறார்கள். மது மஞ்சரி, மைவிழி செல்வி, சத்யா, சபாபதி, முத்து வெங்கட், ஆழிகை, பாரதி யோகேஷ், பிரியங்கா, ரகு, அர்ஜுன் உள்ளிட்ட இவர்களால் மறுவாழ்வு பெற்ற கிணறுகள், ஊரின் கூடுதலமாகவும் குழந்தைகளின் கொண்டாட்டக்களமாகவும் மாறிவிடுகின்றன. வெவ்வேறு துறைகளில் ஐந்திலக்கச் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தவர்களை, கங்கையை மீட்கக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த சுவாமி நிகமானந்தாவின் கனவு ஒன்றிணைத்துக் களத்தில் இறக்கியிருக்கிறது. இதுவரை 9 கிணறுகளை உயிர்ப்பித்திருக்கிற இந்த இளைஞர்களால் கிராமங்களில் சுரந்து ததும்புகிறது அன்பு. அந்த அன்பின் ஊற்றை ஆராதிப்போம்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here