விளையாட்டுமீது பேரார்வம் கொண்டவர்களே அறிந்திடாத ‘போல் வால்ட்'டில் இந்தியாவின் பெருமித முகமாக முத்திரை பதிக்கிறார் இந்தத் தஞ்சை மாவட்டத்து இளம்பெண். குஜராத் தேசியப் போட்டியில் 4.20 மீட்டர் உயரத்தைத்தாண்டி புதிய சாதனை செய்தவர், அடுத்த 15 நாள்களுக்குள்ளாக 4.21 மீட்டருக்குப் பறந்தார். அடுத்தடுத்து உயர உயரப் பறக்கும் இந்த பீனிக்ஸ் பெண்ணிடம் ஒரு போல்-வால்ட் கம்புகூடக் கிடையாது என்பதே வலியும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைச்சுருக்கம். வரைமுறைக்குள் சிக்காத அவரின் கனாக்களைப் போலவே அவரின் சாதனைகளும் விரிந்துகொண்டே செல்கின்றன. வானத்தைத் தாண்டி சாதிக்கட்டும் ரோஸி!