• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • காட்டை மீட்ட காவலன் - ஸ்ரீகாந்த்

காணாமல்போன ஒரு சமூகக்காட்டை மீண்டும் உயிர்ப்பித்திருக்கும் பசுமைக்காவலன் ஸ்ரீகாந்த். வேலூர் மாவட்டத்திலுள்ள உள்ளி கிராமம் மழைக்காலங்களில் நீர்க்காடாகிவிடும். 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மக்களின் துயரைப்போக்க, 26,000 மரங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை அரணை, மணல் கொள்ளையர்களும் நில ஆக்கிரமிப்பாளர்களும் அழித்தொழித்துவிட்டார்கள். அந்தப் பசுமைக்காட்டை மீண்டும் உருவாக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய ஸ்ரீகாந்துக்கு அச்சுறுத்தல்களும் கொலை மிரட்டல்களுமே பரிசாகக் கிடைத்தன. தொய்வின்றிப் போராடி அரசு நிர்வாகத்தின் உதவியோடு ஆக்கிரமிப்புகளைக் களைந்தார். ஸ்ரீகாந்தின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்ட மாவட்ட நிர்வாகம், நிதியும் தந்து, 100 நாள் திட்ட ஊழியர்களை இப்பணிக்குத் திருப்ப, 7,000 நாட்டு மரங்களை அம்மண்ணில் நட்டு மீண்டும் காட்டை உயிர்ப்பித்தார். வெற்று நிலமாகக் கிடந்த இடம் இன்று ஆயிரக்கணக்கான பறவைகளுக்குக் கூடாகியிருக்கிறது. நாடு, பெருங்காடுகளை இழந்துவரும் நிலையில் அழிந்த ஒரு காட்டை மீட்டுருவாக்கம் செய்த ஸ்ரீகாந்த், பசுமைப் பணி செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையின் துளிர்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here