பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமா எழுச்சி பெற்ற ஆண்டு 2022. முழு வீச்சுடன் மக்களை மகிழ்விக்கத் தொடங்கிய திரையரங்குகளுடன், ஓ.டி.டி திரைகளும் இணைந்த கைகளாக ஒளிரத் தொடங்கின. பல சிறிய, பெரிய படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றன. சேட்டிலைட் வியாபாரத்துடன், ஓ.டி.டி வியாபாரமும் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்த் திரையுலகம் பேன் இந்திய முயற்சிகளில் உச்சம் தொட்டதும் இந்த ஆண்டில்தான், கோலிவுட் பற்றிய பேச்சு ஹாலிவுட் வரை நீண்டு புது வரலாறு படைத்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்! இந்த எழுச்சிமிகு வருடத்தில் சாதித்த கலைஞர்களுக்குப் புகழ் மகுடம் சூட்டுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது ஆனந்த விகடன்.