2023 - பெருந்தொற்றை முழுமையாகக் கடந்து பல துறைகளுக்கும் மீண்டும் நம்பிக்கை விதைத்த ஆண்டு. ஆகப்பெரும் ஊக்கமாக, இந்த ஆண்டும் பல மனிதர்கள் களம் கண்டு தமிழ்ச் சமூகத்தின் சமத்துவத்துக்கும் உரிமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தனர். நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், நிலத்தை மீட்கக் குரல் கொடுத்தவர்கள், மகத்தான மனிதநேயத்தின் அடையாளமாக மாறிய மனிதர்கள், மனிதம் பேசிய சினிமாவுக்குச் சொந்தக்காரர்கள், நிலா வரை சென்று அறிவியல் கொடி நாட்டியவர்கள், மரபிசைக்கும் நம் பண்பாட்டுக்கும் காவலாக நின்றவர்கள், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் அரியணை ஏறியவர்கள், தைரியம் ஊட்டிய நம்பிக்கை ராணிகள் என இந்த ஆண்டும் சாதனையாளர்கள் ஏராளம்.
இவர்கள் அனைவரையும் எப்போதும்போல புகழ் வெளிச்சத்தில் நிறுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன். பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் என இந்த ஆண்டும் சாதனையாளர்களின் கதைகள் அனைத்தும் நம் நெஞ்சுக்கு உரமாகக் காத்திருக்கின்றன. நேரில் கண்டு நெகிழ்ச்சியடைய நீங்கள் தயாரா?
கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவைக் காண உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்!